மற்ற செய்திகள்

NPCI INACTIVE DETAILS -REG

கீழே கொடுக்கப்பட்ட EXCEL SHEET  -இல் NPCI மாணவர்களின் நிலுவை விவரத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  npci details-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

MOST URGENT NPCI -REG

கீழே கொடுக்கப்பட்ட Link -இல் NPCI மாணவர்களின் நிலுவை விவரத்தை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  மேலும் இது சார்ந்த கூட்டம் நாளை (13.03.2026)  நடைபெறவுள்ளது.  https://drive.google.com/file/d/1EXysqKWCjfgnN2WYCvIk2bYzrP-39IqB/view?usp=drive_link SL.NO.DETAILS 1DETAILS 2DETAILS 3DETAILS 4DETAILS 5DETAILS 6DETAILS 7DETAILS 81Aadhaar  mapping does not exist/Aadhaar number not mapped to IINAadhaar number is not valid UID NEVER ENABLE FOR DBT UID is Disable for DBTInvalid Gender Value, It Should be F/M/T.pending Inactive AadhaarAadhaar Number  not mapped to Account Number  12221612203666119118241 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு பேராசிரியர் அன்பழகன் விருது -2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் -தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 12.03.2026க்குள் தகுதி பெற்ற பேராசிரியர் அன்பழகன் விருத்திற்கான முன்மொழியினை உரிய படிவத்தில் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 1086-b1Download Perasiriyar Anbazhagan Award 2026Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் -தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -இன்கீழ் மனுதாரர் திரு.ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் அனுப்ப கோருதல் -சார்பாக

வேலூர் மாநகராட்சியில்  உள்ள அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -கீழ் மனுதாரர் திரு. ஆர்.காதர் கோரிய தகவல்களை 17.03.2026க்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து மாநகராட்சி/அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை வழங்க தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்களே முழுப் பொறுப்பு ஏற்கப்படும். DocScanner 10-Mar-2026 2-38 pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வித் துறை -வேலூர் மாவட்டம் – உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – 2025-26 ஆம் கல்வியாண்டு பிப்ரவரி மாதத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு வழங்குதல் – சார்பு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களும் கீழ்காணும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. எனவே போட்டித் தேர்வுகளுக்கான தகவல்களை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அறியச் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. 15 days proceeding for Competitive Exams as on 02.03.2026Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் -சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – 2025-2026 ஆம்  கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் மற்றும் வங்கிகணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவேற்றம் செய்தல் – சார்பாக.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 12 அம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வங்கிக்கணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 808-a5Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி -10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் வெளியிடுதல் -மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் கூட்டம் 10.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நடைபெறுதல் – தெரிவித்தல் தொடர்பாக

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் , மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 10.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு பிள்ளையார்குப்பம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நடைபெறவுள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இத்தகவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 10 th admission rankwise (2026-27)Download 10 th admission blockwise (2026 -27)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம்-தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது – IFHRMS இல் நிரந்தரமாகாமல் தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து தலைமை ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்– தொடர்பாக.

வேலூர் மாவட்டம், அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது – IFHRMS இல் நிரந்தரமாகாமல் தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து தலைமை ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்தும் மற்றும் இணைப்பில் உள்ள சான்றினை பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டும் மற்றும் GTN Report, Scale Register. தொடர் நீட்டிப்பு ஆணை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து 09.03.2026 அன்று அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 976- fileDownload GO 215Download GO 19Download G.O.157Download ANNEXURE (1) (1)Download                                                                                            

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் (நடப்பு கல்வியாண்டில்)2025-2026ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரம் (பாடவாரியாக, வகுப்பு வாரியாக) இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1eUHB8Qls4hzwPIVGp4bi-3hrd2E-njji52eCzTGVs9o/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் – பிப்ரவரி -2026 மாதம் பணிபுரிந்த விவரம் கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் பிப்ரவரி-2026 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பிப்ரவரி -2026 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 04.03.2026 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜனவரி-2026 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நில