ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள்-மாவட்ட அளவிலான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான நில வரைபடத்திறன் (Mapping Skill) பயிற்சி

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள்-மாவட்ட அளவிலான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான நில வரைபடத்திறன் (Mapping Skill) பயிற்சி 31.10.2019 அன்-று காலை 9.30 மணிக்கு செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள மையங்களில் நடைபெறவுள்ளது.  அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சமூக அறிவியல் பாடம்போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், நாளை (30.10.2019) காலை 10.00க்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ. மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் ந நடைபெறும் ஆயத்த கூட்டத்தில் இணைப்பில் உள்ள கருத்தாளர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.