பள்ளிக்கல்வி – 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு – நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கல்வி ஆணையரக மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைத்தல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வி – 2021-2022ம் ஆண்டு 15.02.2022 முதல் நடைபெற இருந்த, பள்ளிக்கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.