மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது  தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்  இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில்  தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று  நடைபெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கூட்டம்  சார்பான விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு

.+2mark sheet issued hm meeting reg

Certificate Distribution – Instructions – SOP

Press Release – March 2020, +2 Mark Sheet (Certificate) Distribution

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.