ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறானாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர)

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுசார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.