ஆசிரியர் தேர்வு வாரியம்- ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025  (ஞாயிறுக்கிழமை) – தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள் )– SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -10.11.2025 –அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள்)  வருகின்ற திங்கட்கிழமை (10.11.2025) அன்று  பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள்  சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.