அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை – பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் தொகுப்பிலிருந்து 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பகிர்ந்தளிக்கப்பட்டது- ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை – பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் தொகுப்பிலிருந்து 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பகிர்ந்தளிக்கப்பட்டது- ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்குதல் சார்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்