தேர்வுகள் -ஆசிரியர் தேர்வு வாரியம்- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி களுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு-2025 -27.12.2025 (சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளமை – தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த, முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள் )– SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -23.12.2025 –அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 இத்துடன் இணைப்பில் காணும், முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் உடற்கல்வி (ஆசிரியர்கள்)  வருகின்ற செவ்வாய்க்கிழமை  (23.12.2025) அன்று  பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள்  சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் உடற்கல்வி (ஆசிரியர்கள்)  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

குறிப்பு :தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் கட்டாயம் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.