தேர்வுகள் – வேலுர் மாவட்டம் – மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2025 -தேர்வு மையத்திற்கு அறை கண்காணிப்பாளர்/சொல்பதை எழுதுபவராக (SCRIBE) நியமன ஆணை வழங்குதல் – சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலுர் மாவட்டம் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2025 -தேர்வு மையத்திற்கு அறை கண்காணிப்பாளர்/சொல்பதை எழுதுபவராக (SCRIBE) நியமன ஆணை இன்று 27.02.2025 மதியம் 3.00 மணிக்கு இவ்வலுவலக ஆ4 பிரிவில் தவறாமல் வந்து பெற்று கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கபடுகிறது.]

குறிப்பு : காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஒன்றியப்பள்ளிகளை பொறுத்தவரை வேலூர் காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆணையை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//ஓம்//

 முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

நகல் ,

  1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  2. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.