வேலூர் மாவட்டம் – புதன்கிழமை 11.09.2024 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி என்ற நிகழ்வு – கலந்து கொள்ள – தெரிவித்தல் – சார்பு.

அனைவருக்கும் வணக்கம்அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு நாளை மறுநாள் புதன்கிழமை 11.09.2024 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பு முடித்து உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி என்ற நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளதால், உயர்கல்வி சேராத இணைப்பில் உள்ள மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் சார்ந்த பள்ளி உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர் இணைப்பில் உள்ள வருகை பதிவேடுடன் தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.