பதிவுரு எழுத்தர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நிரவல் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (01.10.2022) காலை 7.30 மணிக்கு வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

முதன்மைக்கல்வி / மாவட்டக்கல்வி / வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்து அரசு /நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பதிவுரு எழுத்தர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நிரவல் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) நாளை (01.10.2022) காலை 7.30 மணிக்கு வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால் இணைப்பில் உள்ள முன்னுரிமைப்பட்டியலை சரிபார்த்து திருத்தம் இருப்பின் காலை 7.30 மணிக்கு நேரில் தெரிவிக்குமாறு சம்மந்தப்பட்ட பணியாளருக்கு அறிவுரை வழங்கி கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்ப அலுவலர்கள் மற்றும்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஏதேனும் திருத்தம் இருப்பின் அதற்கான உரிய சான்றுகளுடன் நேரில் வருமாறு சார்ந்த பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்