தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 – 11ம் வகுப்பு அனைத்து பள்ளிகள் மாணவர்கள் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பு

அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE – ICSE உட்பட) பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கவனத்திற்கு

அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE – ICSE உட்பட) பள்ளியில் பயிலும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 01 – 10- 2022ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் மூலம் தெரிவிக்கவும் , அக்கடிதம் தங்கள் தொடர் நடவடிக்கைக்காகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE – ICSE உட்பட) பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE – ICSE உட்பட) பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.