பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 2022- முதுகலை ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – நடைபெறுதல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்(பட்டியலில் உள்ளவாறு),

பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 2022- முதுகலை ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு கீழ்காணும் அட்டவணைப்படி பாடவாரியாக கலந்துரையாடல்/ ஆலோசனை/ புத்தாக்கப்பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சார்பான நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் சம்மந்தப்பட் பாட ஆசிரியர்கள் கலந்து கொள்ளவேண்டிய நாட்களில்  பணிவிடுவித்தனுப்ப அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பார்வையில் கண்ட கடிதத்தின்  வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

                   இதில் பயிற்சி அளிக்க ஏதுவாக கலந்து கொள்ள வேண்டிய முதன்மை கருத்தாளர் மற்றும் கருத்தாளர்கள் விவரம் கீழ்கண்டவாறு அனுப்பப்படுகிறது.  பாட ஆசிரியர்கள் பயிற்சிக்கு கலந்து கொள்ள வரும்பொழுது கீழ்கண்ட தேர்ச்சி சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.