மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 – விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் விண்ணப்பம் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 தொடர்பாக விடைத்தாட்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுசெய்ய 04-10-2021 மற்றும் 05-10-2021 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள விவரம் பள்ளி மாணவர்கள். பெற்றோர்கள், மற்றும்பொதுமக்கள் அறியும் வண்ணம் பள்ளி தகவல் பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது