27-07-2020 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்விற்கு தேர்வு எழுத மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற்று தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்த விவரம் அளிக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் // தனிகவனம் //

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

24.03-2020 அன்று  நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு 27-07-2020 அன்று தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது 27-07-2020 அன்று மேல்நிலை இரண்மாண்டுத் பொதுத் தேர்வு எழுத விருப்ப கடிதம் வழங்கிய மாணவர்களின் விவரம் மற்றும் அம்மாணவர்களுக்கு  தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்த விவரங்களை 20-07-2020 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியினை தொடர்பு கொண்டு விவரங்கள் வழங்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

எஸ். சுரேந்தர் பாபு, உதவியாளர்  – 9442273554     –    9488880036

எஸ். சையத் ரியாசுதீன்,  இநிஉ    – 8825004447

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.