11.04.2023 (இன்று) முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்பட்ட அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முகாம் வருகைச்சான்று இருந்தால் மட்டுமே மீள பணியில் சேர அனுமதிக்க தெரிவித்தல்

அனைத்து வகை அரசு/நகரவை/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

            11.04.2023 (இன்று)  முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்பட்ட அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முகாம் வருகைச்சான்று இருந்தால் மட்டுமே மீள பணியில் சேர அனுமதிக்கும்படி அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது..

           ஓம்/-க.முனுசாமி,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.