சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள (11.10.2025 ) சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 08.10.2025 அன்று மதியம் 3.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படவுள்ளது 09.10.2025 அன்று மதியம் 4.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீள தெரிவிக்கப்படுகிறது.

//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
சார்ந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,
சார்ந்த உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு)
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை/தனியார்) தகவலுக்ககாவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
