- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி வளாகங்களிலும் குறைந்தது 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். அதன் விவரத்தையும் புகைப்படத்துடன் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவல் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதால் உடனடியாக இன்று (05.06.2025) பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தங்கள் பள்ளி வளாகங்களில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகள் பிரித்து எவ்வளவு உள்ளன என்ற விவரத்தை இன்று (05.06.2025) பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
https://forms.gle/qVXk9uufAC7VBWUt7
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தலைமையாசிரியர்கள்,
அனைத்த அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.