ஆசிரியர் தேர்வு வாரியம்-முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு (12.10.2025 ) ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (11.10.2025 ) சனிக்கிழமை –நடைபெறவுள்ளமை – இரண்டு தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம் –சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் – SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி),காட்பாடி, வேலூர் -07.10.2025 –அன்று பிற்பகல் 03.00 மணிக்கு கலந்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக .

       சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வருகின்ற செவ்வாய்க்கிழமை  (07.10.2025) அன்று  பிற்பகல் 03.00 மணியளவில் தேர்வு சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

//ஓம்.சு.தயாளன்//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது..

உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி )SSA ,காந்தி நகர்,வேலூர். தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.