அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியை இரத்து செய்து உரிய பள்ளிகளில் பணியில் சேர விடுவித்தல்

பெறுநர்

அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2017-18ம் கல்வி ஆண்டில் மாணவர் நலன் கருதி ஆசிரியர் இன்றி காலியாக இருந்த பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவுற்ற நிலையில்  மாற்றுப்பணியை இரத்து செய்து சார்ந்த ஆசிரியர்களை உரிய பள்ளிகளில் சேர விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிதலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்