அனைத்து  அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்  மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  நடைபெற்றுக் கொண்டிருக்கும் +1 மற்றும் +2  பொதுத் தேர்விற்கு பணிபுரிய தங்கள் பள்ளிகளில் இருந்து தேர்வுப் பணிக்காக சென்றிருக்கும்  அனைத்து முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து வரும் சனிக்கிழமை (01.04.2023)அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினையும், தேர்வுப் பணிக்கு செல்லாத முதுகலை ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின்,  அவர்களின் விவரங்கள் மற்றும் தேர்வுப் பணியில் அனைவரும் ஈடுபட்டிருப்பின் இன்மை அறிக்கையும் தவறாமல் தனிநபர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் நேரில் தவறாமல் ஒப்படைக்குமாறு  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.