2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் உடனடியாக சமர்ப்பிக்கக் கோருதல்

அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 13.01.2020- 12.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விவரங்களை உடனே உள்ளீடு செய்யுமாறும், மாணாக்கர்கள் பள்ளியில் வழங்கியுள்ள கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில்  மட்டுமே தேவைப்பட்டியல் கேட்கப்படவேண்டும் எனவும் அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

CLICK HERE TO ENTER THE DETAILS

 CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST