மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை வழங்குதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை 20-04-2022அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் உரிய முகப்புக் கடிதம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால் மந்தன கட்டுக்கள் பெற வருகை புரியவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது