மேல்நிலை பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை உடன் விடுவிக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாட முதுகலை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாட ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  1. தமிழ்,
  2. ஆங்கிலம்
  3. கணிதம்
  4. பொருளியியல்
  5. கணினி அறிவியல்

மேற்குறிப்பிட்டுள்ள பாடங்கள் போதிக்கும் மேல்நிலைப் பிரிவு ஆசிரியர்கள் உடன் விடுவித்து 03-06-2022 அன்று காலை 09.00 மணிக்கு வேலூர் சாயிநாதபுரம் என் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணியினை மேற்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு

மகப்பேறுவிடுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களை கட்டாயம் பணிவிடுவிப்பு செய்யப்படவேண்டும். பணியிலிருந்து விடுவிக்கவில்லை என தகவல் பெறப்பட்டால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பணிவிடுவிப்பு ஆணை பெறப்பட்ட ஆசிரியர்கள் மதிப்பீட்டு மையத்தில் மதிப்பீட்டு பணியில் கட்டாயம் ஈடுபடவேண்டும். பணிவிடுப்பு பெற்று மதிப்பீட்டு மையத்தில் வருகை புரியவில்லை என கண்டறியப்பட்டால் சார்ந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவக்கைக்காகவும் அனுப்பலாகிறது.