தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS) 2015-2016ம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல் மாணவர்கள் விவரம் மற்றும் வங்கி தொடர்பாக விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதிபடுத்த கோருதல் சார்பு.

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வுகள் தொடர்பாக 2015-2016ம் ஆண்டு முதல் மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்கள் மற்றும் முக்கியமாக வங்கி கணக்கு, வங்கி சார்பான விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 30-06-2022 அன்று மாலைக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலமாக அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பொருள் சார்பான தனி கவனம் செலுத்தி இன்றே இப்பணியினை மேற்கொள்ளுமாறும் சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

9791888163

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்ககாவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.