தமிழ்நாடு அடிப்படைப்பணி – அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர்  பதவியில் இருந்து – பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2023 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  உத்தேச பெயர்  பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அலுவலகங்கள் மற்றும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அலுவலக உதவியாளர்கள், துப்புரவாளர்கள் மற்றும் இரவுக் காவலர்களுக்கு வருவாய் மாவட்டஅளவில்  பதிவறை எழுத்தர் பதவி உயர்விற்கான தற்காலிக உத்தேச பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.  இணைக்கப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலில் வ.எண் 1 முதல் 30 வரை இடம் பெற்றுள்ள பணியாளர்கள் இவ்வலுவலவகத்தில் 23.09.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்குள் நேரில் விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.