உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9,10ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி – முதன்மைக் கருத்தாளர் பயிற்சி – பணிவிடுவிப்பு செய்ய தெரிவித்தல் தொடர்பாக.

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த- மாவட்ட முதன்மைக் கருத்தாளர் பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளிகளில் 09.06.2023 அன்று காலை 9,30 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிறிசியில் மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருண்மைகளைக் குறித்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அந்தந்த வட்டார வள மை மேற்பார்வையாளர்கள் மூலமாக உரிய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து பணிவிடுவிப்பு செய்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்,

அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.