இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் – 2022-2023 ஆம் ஆண்டிற்குரிய மாணவர் சேர்க்கை- கண்காணிப்பு பணி மேற்கொள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் & முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் – தொடர்பாக.

இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் – 2022-2023 ஆம் ஆண்டிற்குரிய மாணவர் சேர்க்கைக்கு 30.05.2022 கண்காணிப்பு பணி அலுவலர்களாக செயல்பட இணைப்பில் காணும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களை தங்கள் பெயருக்கு எதிரே உள்ள பள்ளிகளில் மேற்காண் பணிக்கு நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களை 29.05.2022 அன்று பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு இணைப்பில் காணும் சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது,

//ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்

மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு (த.ஆ மூலமாக)

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.