CIRCULARS

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ம் மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் 20-06-2022 அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி தகவல் பலவை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்காண் பொருள் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்ட கடிதம் தகவலுக்காக இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவ

மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரின் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோரப்பட்டது. இதுவரை விவரங்களை உள்ளீடு செய்யாத மற்றும் அனுப்பாத பள்ளிகள் உடனடியாக 20.06.2022க்குள் உள்ளீடு செய்யவும் மற்றும் படிவங்களை அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படியும். மேலும், படிவங்களை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் 27.05.2022 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நினைவூட்டுகள் 03.06.2022, 16.06.2022  நாளிட்ட கடிதங்கள் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளிகள் தவிர இதுந

பள்ளிக்கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி பயன்பாட்டிற்கு கொண்டுவருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Digital-App_20220617_0001Download STAFF-LEAVE-APPLICATION-செயல்பாட்டு-வழிமுறைகள்_Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வட்டாரவள மைய கூட்டம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (Hitech Lab உள்ள பள்ளிகளில்) 18.06.2022 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வட்டாரவள மைய கூட்டம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (Hitech Lab  உள்ள பள்ளிகளில்) 18.06.2022 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் சார்ந்த ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தனுப்பும்படி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1857-b2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மே-2022ல் நடைபெற்ற 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) மற்றும் பத்தாம் வகுப்பு / S.S.L.C. பொதுத்தேர்வு முடிவுகள் 20.06.2022 அன்று வெளியிடப்படவுள்ளது. நேரம் மற்றும் இணையதளம் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, மே-2022ல் நடைபெற்ற 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) மற்றும் பத்தாம் வகுப்பு / S.S.L.C. பொதுத்தேர்வு முடிவுகள் 20.06.2022 அன்று வெளியிடப்படவுள்ளது. நேரம் மற்றும் இணையதளம் ஆகிய விவரங்களை, இணைப்பில் உள்ள செய்திக்குறிப்பை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2-sslc-Result-Press-ReleaseDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் – மாவட்ட மற்றும் வட்டார அளவில் முழு நேரமாக செயல்பட மாற்றுப் பணியில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் – உபரியாக உள்ள ஒருங்கிணைப்பாளர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தனுப்புதல்

CIRCULARS
வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - மாவட்ட மற்றும் வட்டார அளவில் முழு நேரமாக செயல்பட மாற்றுப் பணியில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் - உபரியாக உள்ள ஒருங்கிணைப்பாளர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ITK-Dist-Block-Co-ordinators-Reliving-RegDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசால் வழங்கப்படுகிற விலையில்லா பாடப்புத்தகம் வரும் வெள்ளிக்கிழமை (17.06.2022)க்குள் அனைத்து பள்ளிகளிலும் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தல்

CIRCULARS
முக்கிய செய்தி வரும் 21.06.2022 அன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு வருகைபுரியவுள்ளார். அரசால் வழங்கப்படுகிற விலையில்லா பாடப்புத்தகம் வரும் வெள்ளிக்கிழமை (17.06.2022)க்குள் அனைத்து பள்ளிகளிலும் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் காணப்படுமாயின் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடுமென திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. புத்தகங்கள் பெறப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது என்ற அறிக்கையினை வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. // அவசரம் மற்றும் மிக முக்கியம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமை ஆசிரியர்கள்

Spoken English Teacher Professional Development Programme – 16.06.2022 முதல் 17.06.2022 வரை நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வேலூர், ஊரிசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் -4 மற்றும் 5 வகுப்பு – 6 முதல் 9 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவித்தனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள்/பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), Spoken English Teacher Professional Development Programme - 16.06.2022 முதல் 17.06.2022 வரை நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வேலூர், ஊரிசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் -4 மற்றும் 5 வகுப்பு - 6 முதல் 9 வகுப்பு ஆங்கில ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை கருத்தாளர் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் உடனடியாக விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கும்படி சம்மந்தப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Scan1ala0001Download 1-5-AND-6-9-Spoken-English-

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ளதால் அது சார்ந்து தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் 16.06.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,        ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 02.07.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ளதால் அது சார்ந்து தலைமையாசிரியர்களுக்கான ஆயத்தக் கூட்டம் 16.06.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால கீழ்கண்ட தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, அவை சார்ந்த விவரங்களுடன் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டப்பொருள் பள்ளி மேரலாண்மைக் குழு மறுகட்டமைப்பு.2022-23ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை.2022-ம் ஆண்டு நடைபெற்ற 10-ம் பொதுத் தேர்வில் - தேர்விற்கு வருகைபுரிய