2018 பொதுத் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 98 %, 99 % , 100 % தேர்ச்சி பெற்று தந்த அரசு / நகரவை / ஆதிதிராவிட / நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்

2018 பொதுத் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 98 %, 99 % , 100 % தேர்ச்சி பெற்று தந்த அரசு / நகரவை / ஆதிதிராவிட /  நிதியுதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்

இணைப்பில் குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 

மார்ச் / ஏப்ரல் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 %, 99 % , 100 % தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பாராட்டுச்சான்றிதழ் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து 14-08-2018 இன்று மாலை 04.00  மணிக்குள் பெற்று 15-08-2018 அன்று (நாளை)  தங்கள் பள்ளியில் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவில் சார்ந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்குமாறு தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST

TEACHERS NAME LIST

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

இணைப்பில் குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை /  வாணியம்பாடி /  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது 14-08-2018 அன்றே சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அதன் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.