வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பொறுப்பில் உள்ள SMC தலைவர்களுக்கான கூட்டம் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.01.2024 – புதன்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு காட்பாடி சன்பீம் பள்ளி கூட்டரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அரசு உயர்/மேனிலைப் பள்ளி SMC தலைவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து தவறாமல் கலந்துகொள்ளச் செய்யுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/தொடக்கக் கல்வி) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.