அனைத்துவகை துவக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த தெரிவித்தல்

ந.க.எண்.5525/ஆ5/2018, நாள் 13.08.2018

பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  ந.க.எண்.00867/எம்/இ2/2018, நாள் 12.08.2018 செயல்முறைகளில் (இணைக்கப்பட்டுள்ளது)  குறிப்பிட்டவாறு 15.08.2018 அன்று அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்திய விவரத்தை பள்ளியின் பெயர் மற்றும் அதற்கான புகைப்படத்தை இவ்வலுவலக மின் அஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு 15.08.2018 அன்று மாலைக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.