COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ
/ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர்
இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்து
ஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும்
ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

            எனவே, இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகளிர்
(18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர் எனில்  கீழே
கொடுக்கப்பட்டுள்ள ICDS அலுவலக பணியாளரின் கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு
விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்த
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கைபேசி எண்: 9841973365

 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.