01.01.2011க்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு அனுமதி பெறுதல் சார்பான அரசாணை அனைத்து தனியார் பள்ளிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்து தனியார் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./நிதியுதவி/சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு,

14.06.2018 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள  G.O.Ms.No.76, Dated:14.06.2018 அரசாணையினை நிறைவு செய்யும்வகையில் தங்கள் பள்ளி கட்டிடங்கள் 01.01.2011-க்கு முன்னர்  DTPC (உள்ளூர் திட்டக்குழுமும்) அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 3 மாதங்களுக்குள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி கட்டிட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  கட்டிட அனுமதி பெற்ற நகலினை முதன்மைக்கல்வி அலுவலகம்/ மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 3 மாதங்களுக்குள்  சார்ந்த பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

G.O.ms.No.76,Housing dept, dt.14.06.2018

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.