மாநில அரசின் பள்ளி அங்கீகார ஆணை சார்பாக செயலர், சி.பி.எஸ்.இ. , புதுடெல்லி அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை – உரிய நடவடிக்கை மேற்கொள்ள சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ. தாளாளர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு

 

31.05.2018 அன்று செயலர், சி.பி.எஸ்.இ. , புதுடெல்லி அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கைஅனைத்து பள்ளிகளின் கவனத்திற்கும் அனுப்பப்படுகிறது

எனவே, சி.பி.எஸ்.இ. போர்டில் இணைப்பு பெற்றுள்ள (Affiliation) அனைத்து பள்ளிகளும் RTE சட்டத்தின்படி  மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார ஆணையினை பெற்று செயல்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  எனவே, வேலூர் மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடமிருந்து  தடையின்மை சான்று  (NOC) பெற்று பள்ளி செயல்பட்டு வந்தாலும், மாநில அரசின் அங்கீகார ஆணை  (Recognition order) நாளது தேதிவரை பெறாத பள்ளிகள் அங்கீகார ஆணை பெறுவதற்கான கருத்துருக்களை உரிய சான்றுகளுடன்  மறு நினைவூட்டலுக்கு இடமளிக்காமல் உடனடியாக  வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE Affilaition Cell Circular (1)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.