01.01.2022 நிலவரப்படி – பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருக்கள் 05.04.2022 அன்று சமர்ப்பிக்க கோரியது – தகுதிவாய்ந்தவர்கள் இல்லை எனில் பாடவாரியாக தனித்தனியாக இன்மை அறிக்கை சமர்ப்பிக்க கோரியது – விவரங்கள் அளிக்காத பள்ளிகள் – உடன் விவரம் அளிக்க தெரிவித்தல்

சார்ந்த அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களிடமிருந்து கருத்துருக்கள் பெற்று அனுப்பவும், தகுதிவாய்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு எவருமில்லை எனில் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) என பாடவாரியாக இன்மை அறிக்கை 05.04.2022 அன்று மாலை 3.00 மணிக்குள் ஒப்படைக்க கோரி 28.02.2022 அன்று edwizevellore.com இணைய தளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கீழ்காண் தலைமையாசிரியர்கள் விவரங்கள் சமர்ப்பிக்காதது வருந்தத்தக்கதாகும். எனவே, 06.04.2022 அன்று  நன்பகல் 12.00 மணிக்குள் தவறாமல் கருத்துருக்களை முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4‘ பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்