மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வு முடிவுகள் 2023  வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் /ஏப்ரல் -2023 நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 2023ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளிபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை  மேல்நிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.