தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –  80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – தெரிவித்தல் -சார்பு

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

ஓம்(க.முனுசாமி )

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல் ,

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு