மன்ற செயல்பாடுகள்- பள்ளி அளவில் பங்கேற்பாளர் எண்ணிக்கை பதிவு செய்தல்

அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை/உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

பள்ளி அளவில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைப்பெற்ற நான்கு மன்ற போட்டிகளிலும் பங்கேற்ற மற்றும் வெற்றிப் பெற்ற மானவர்கள் விபரங்களை EMIS-School Login ல் இன்று (01.09.2023)மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நான்கு மன்ற போட்டிகளிலும் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கை பல பள்ளிகளில் 1 என பதிவு செய்யப்பட்டுள்ளது. மானவர்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. EMIS-School Login ல் EDIT செய்ய இயலும் என்பதால் சரியான பங்கேற்பாளர் (No .of students Participated) தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.