தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டு சான்று ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் சார்பாக.

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது. அவ்வாறு மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பள்ளிகள் செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று மற்றும் சென்ற கல்வியாண்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து ஒப்படைக்க பலமுறை தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பயனீட்டுச் சான்று, புகைப்படங்கள் பெறப்படவில்லை. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் பயனீட்டுச் சான்று 3 அசல் பிரதிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து இன்று (17.06.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE UTILISATION CERTIFICATE

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.