//தனி கவனம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2023 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள படிவங்களை மிகச்சரியாக பூர்த்தி செய்து கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் இரு நகல்களில் இவ்வலுவலக “அ4” பிரிவில் 17-08-2023 அன்று மாலை 4.00 மணிக்குள் அளவு கோல் பதிவேட்டுடன்  தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.17-08-2023 அன் நேரில் ஒப்படைக்கவும் தவறும் பட்சத்தில் 18-08-2023 அன்று காலதாமத்திற்கான விளக்கத்துடன் கருத்துருவினை ஒப்படைக்குமாறு அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேல்நிலைக்கல்வி – 01-08-2022 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.