கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. பலநினைவூட்டுகளில் தெரிவிக்கப்பட்டும் இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து இதுநாள்வரை சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இதனையே கடைசி நினைவூட்டாக கருதி 27.05.2019 அன்று காலை 11.00  மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.