அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிட நல மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. மார்ச் – 2022 ல் 10 -ஆம் வகுப்பு பொது தேர்வு  எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களைக்கண்டறிந்து  (Oosc) தேர்வு  எழுதும்  வைக்கும் பொருட்டு  சார்ந்த  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை (05.05.2023) காலை 10.00 மணி அளவில் காந்திநகர் Samagraha Shiksha (SSA) கூட்ட அரங்கில்  முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மற்றும்  உதவி திட்ட அலுவலர்  அகியோர்களால்  நடத்தப்படும்  கூட்டத்திற்கு  அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட நல மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மார்ச்-2022ல் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத / தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர்களின் விவரங்களுடன்  கூட்டத்தில்  கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

          மேலும் 31.05.2023 அன்று ஓய்வு பெறவுள்ள  உயர் / மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள்  கூட்டத்திற்கு வரும்போது தவறாமால்  தங்கள் பள்ளியில்  பணிபுரியும் உதவி / பொறுப்பு தலைமை ஆசிரியர்களை உடன்  அழைத்து  வருமாறு  தெரிவிக்கப்படுகிறது.

         

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிட நல மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,