அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ளப்பட்டது – நடப்பட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு.

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

     அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ளுமாறும், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கவும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

     எனவே நடப்பட்டு, பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் எண்ணிக்கை சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (05.04.2022) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.