NTS EXAM DECEMBER 2020 – பள்ளி அளவில் மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக 05.12.2020 ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தெரிவித்தல்-சார்பாக

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு

தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர்-2020 – மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கூடுதலாக நாளை 05-12-2020 ஒரு நாள்  மட்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,எனவே சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை  பள்ளி அளவில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்,  பிறகு உள்ளீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக அரசு தேர்வு இயக்ககத்தால் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  உரிய  காலத்திற்குள் உள்ளீடு செய்யப்படாமலிருப்பின் அதற்கு சார்ந்த தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் CBSE   மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி  முதல்வர்கள்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.