NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு NSP இணையதளத்தில் புதியது மற்றும் புதுப்பித்தல் பணியினை உடன் முடிக்க கோருதல் சார்பு

அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2022-2023ம் கல்வியாண்டிற்கான NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு NSP இணையதளத்தில் 10-08-2022க்குள் புதியது விண்ணப்பம் உள்ளீடு செய்யும் (Fresh Application) பணியினை முடிக்குமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  1. ஒடுக்கத்தூர் மகளிர் 2. நேஷனல் குடியாத்தம் 3. திருவள்ளுவர் குடியாத்தம் 4. அக்ஸீலியம் காட்பாடி 5. பொன்னை மகளிர் 6. லத்தேரி மகளிர் 7. செயின் மேரிஸ் வேலூர் 8. ஈவெரா வேலூர் 9. என் கே எம் சாயிநாதபுரம்

மேலும் 2022-2023ம் கல்வியாண்டிற்கான NMMS புதுப்பித்தல் விண்ணப்பங்களையும் உடன் NSP இணையதளத்தில் 10-08-2022க்குள் உள்ளீடு செய்யும் (Renewal Application) பணியினை உடன் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.