மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் பணி ஆசிரியர்கள் நியமனம்

வேலுர்  கல்வி மாவட்டத்திலுள்ள  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வுகள் தொடர்பாக வேலுர் மாவட்டத்தில் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மைய மதிப்பீட்டு முகாம் 19-06-2019 முதல் செயல்படவுள்ளது. இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களில் முதன்மைத் தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களை 19-06-2019 அன்று காலை 08.30 மணிக்கும் உதவித் தேர்வர்கள் 20-06-2019 அன்று காலை 08.30 மணிக்கு முகாமில் ஆஜராகும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் மீது தனிகவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

பெயர் பட்டியல் (திருத்திய பட்டியல்)

CE SO AE NAME LIST

குறிப்பு

இணைப்பில் காணும் பெயர் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களில் மூத்த ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் (வேலுர் கல்வி மாவட்டம் மட்டும்) அவர்கள் 19-06-2019 அன்று முகாம் நடைபெறும் காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

 

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

 

மாவட்டக் கல்வி அலுவலர்

இராணிப்பேட்டை / வேலுர்  தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.