வேலுர் கல்வி மாவட்டத்தில் +2 ஜூன் 2019 தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியில் கட்டாயம் கலந்துக்கொள்ளவேண்டும்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலுர் கல்வி மாவட்டதில் மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பாக மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19-06-2019 முதல் நடைபெறவுள்ளது. எனவே வேலுர் கல்வி மாவட்டத்தில் மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கிறோம்.  முகாம் பணியில் ஈடுபடும்  ஆசிரியர்களக்கு  வேறு நாட்களில் பயிற்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

வேலுர் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.