மிக அவசரம்  / நினைவூட்டு கடிதம் – 1 வேலூர் மாவட்டம் – பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இனவாரியாக கோருதல்.

 பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இனவாரியாக ஏற்கனவே கோரப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகளிலிருந்து இது நாள் வரை பெறப்படவில்லை. அரசுக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு உடனடியாக 11.09.2023 இன்று மாலை 06.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு அனுப்பிவிட்டு ஒரு நகலை தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.