சதுரங்க ஒலிம்பியாட் போட்டி சார்பான செய்தி

சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் 25-07-2022 அன்று நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிக்கு கலந்துக்கொள்ள வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் போட்டி காலை 07.30 மணிக்கு துல்லியமாக துவங்கப்படவுள்ளதால் காலை 7.00 மணிக்கு வருகை புரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் அன்றைய தினமே சென்னை செல்லவுள்ளதால் தயார் நிலையில் கூடுதலாக சீறுடை மற்றும் தங்குவதற்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் தயார்நிலையில் வைக்க மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

சதுரங்க போட்டியில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.